News April 13, 2025

கிருஷ்ணகிரியில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

image

திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவரது கணவர் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த, 8 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாயமான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணையாற்றில் சடலமாக மிதந்தார். மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 18, 2025

வேன் மீது கார் மோதி விபத்து பெண் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளி அடுத்த, காமாட்சிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (42) குடும்பத்துடன் மாருதி 800 காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பினார். அப்போது மத்துார் அருகே, கண்ணன்டஹள்ளியில், எதிரே வந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது. இதில், காரிலிருந்த அவரது தாய் உமாராணி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் இடிபாடுகளில் சிக்கிய கோபிநாத்தை 2 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.

News April 18, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 17, 2025

காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 17.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!