News April 1, 2025

கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை அமைச்சர் தகவல்

image

ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 25, 2025

கிருஷ்ணகிரி: லாரி மீது பஸ் மோதி 11 பேர் காயம்

image

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, குருபரப்பள்ளி அருகே பண்டாரப்பள்ளியில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சூளகிரி சுவேதா, கடத்தூர் விஜயா உட்பட 11பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

ஓசூரில் மாபெறும் கல்வி கடன் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கி நிர்வாகம் சார்பில் வருகின்ற நவ.26 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

கிருஷ்ணகிரி: தாய் சொன்ன வார்தையால் மனமுடைந்த சிறுமி தற்கொலை

image

காவேரிப்பட்டினம் அடுத்த ஜோதிபுரம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி திவ்யா. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திவ்யாவிடம் தாய் சுசிலா வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திவ்யா வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!