News August 8, 2024

கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். இந்த யானை பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ காவேரிப்பட்டினம் – அண்ணா திருமண மண்டபம்
✅ ஓசூர் வட்டாரம் – எஸ்.வி.எஸ் திருமண மண்டபம், தொரப்பள்ளி அக்ரஹாரம்
✅ பர்கூர் – அரசு மேல்நிலை பள்ளி, பி.ஆர்.ஜி மாதப்பள்ளி
✅ சூளகிரி – அரசு உயர்நிலை பள்ளி, மொரனபள்ளி (SHARE IT)

News September 16, 2025

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் கிருஷ்ணகிரி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் அகழ்வாய்வில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அவை கிமு 8450-ம் ஆண்டைச் சேர்ந்த நுண்கற்காலப் பொருட்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர் உலகின் ஆதிகுடி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

News September 15, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!