News April 25, 2025
கிருஷ்ணகிரியின் ரம்மியமான காட்சிகள்

கிருஷ்ணகிரி மலைகள் சூழ்ந்த அழகான ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டு முதல் இது தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்கு நிலவும் ரம்மியமான வானிலை மனதுக்கு இதம் அளிக்க கூடியதாக உள்ளது. இயற்கை வளங்கள் சூழ்ந்த இந்த மாவட்டத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஆணிவேர் விவசாயம். மனதை கொள்ளை அடிக்கும் கிருஷ்ணகிரியின் அழகிய காட்சிகளை ரசித்து மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News November 15, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News November 14, 2025
கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில், தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார் இன்று (நவ.14) குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, வட்டாட்சியர் ரமேஷ், குழந்தைகள் இல்ல காப்பாளர் கிருஷ்டோபர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
News November 14, 2025
இரவு ரோந்து காவலர்கள் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்

கிருஷ்ணகிரி நவம்பர் 14 இன்று இரவு ரோந்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம் காவல்துறை அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது. தனிப்பட்ட மொபைல் எண் அல்லது இலவச மொபைல் எண் 100,112 என்னில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


