News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 1, 2026
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 1, 2026
மதுரை: பிள்ளைகள் கைவிட்டதால்… மூதாட்டி சோக முடிவு!

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
மதுரை: கார் ஏறி இறங்கியதில் ஒருவர் பரிதாப பலி

மதுரை பெருங்குடி ரோட்டில் உள்ள சாய் ஓட்டல் அருகே, சாலையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருந்தார். அங்கு நிறுத்தி இருந்த காரை அதன் உரிமையாளர் எடுக்கும் போது, படுத்திருந்தவர் மீது கார் ஏறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மதிச்சியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


