News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 19, 2025
புதுக்கோட்டை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

புதுக்கோட்டை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
புதுகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (அக்.20) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
News October 19, 2025
புதுக்கோட்டை: தேனி வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குடுமியான்மலையில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில், 26 நாட்கள் 25 நபர்களுக்கு தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் அக்.,22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை கல்லூரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.