News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 7, 2025
குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
குமரியில் நூதன முறையில் நகை பறிப்பு

வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தங்க லட்சுமி(70). இவரது மகன் இருதய சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க தங்க லட்சுமி வந்த போது ஒருவர் அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி வாங்கி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
News November 7, 2025
குருந்தன்கோட்டில் தேனீ வளர்ப்பு பயிற்சி

குருந்தன்கோடு வட்டாரத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் விவ சாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நாகர்கோவில் ஆத்திக்காட்டு விளையில் அடுத்த வாரம் துவங்கப்படுகிறது. இதில் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ மூலம் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


