News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 25, 2025

திருப்பூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எங்களை Saveபண்ணி வைத்துக்கோங்க, SHARE பண்ணுங்க.

News November 25, 2025

திருப்பூர்: ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைகள்!

image

1) பரோடா வங்கியில் வேலை -(https://bankofbaroda.bank.in/)
2) தமிழக சுகாதாரத்துறையில் வேலை-(mrb.tn.gov.in)
3) மத்திய உளவுத்துறையில் வேலை- (mha.gov.in)
4) ரயில்வேயில் 1,785 பேருக்கு வேலை -( rrcser.co.in)
5) சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -(clri.org)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 25, 2025

வெள்ளகோவில்: 40 ஆண்டுக்கு பின் கைது! ஷாக்கான மக்கள்

image

திருப்பூர், வெள்ளகோவில் அடுத்த தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (75). இவர் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரில் முதியவர் செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கிளீனிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

error: Content is protected !!