News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News January 3, 2026
தருமபுரி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

தருமபுரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
தருமபுரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான 2 நாள் முகாம் நடைபெற உள்ளது. ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் தருமபுரி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற சேவைகள் நடைபெரும். மேலும் இதில் மக்கள் கலந்துக்கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளும்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News January 3, 2026
தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி நான்கு ரோடு அருகில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


