News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 27, 2025
நங்கவரம் அருகே கத்திக்குத்து

நங்கவரம் அருகே சண்முகம் என்பவரிடம், கேசவன் என்பவர் கடன் கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. நேற்று இரவு சண்முகத்திடம் கேசவன் பணம் கேட்டு மிரட்டி மறைத்து வைத்த பட்டாகத்தியால், வெட்டியதில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 27, 2025
கரூரில் நாளை.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2026-ம் ஆண்டிற்கான TNPSC-Gr-I &GR-2, ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு (நவ.28) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94990-55912 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News November 27, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: தீவிர விசாரணை

கடந்த செப்., 27ல், கரூரில் தவெக., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சிபிஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


