News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 23, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

கரூர் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று தனது பைக்கில் திருமாநிலையூர் சாலையில் சென்ற போது சுரேஷ்குமார் ஒட்டி சென்ற மினி வேன் திடீரென வலது புறம் திரும்பியபோது பைக் மோதியதில் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பலத்த காயத்துடன் கரூர் GH-ல் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 23, 2025

கரூர்: கடன் வேண்டுமா? APPLY NOW

image

கரூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படும். இதில் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில், 25 சதவீதம் என அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலத்தை அனுகவும். 04234-245177, 8925533960 என்ற எண்ணை அழைக்கவும்.

News November 23, 2025

பஞ்சபட்டியில் வீட்டின் பின்புறம் மது விற்ற பெண் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல பஞ்சபட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி மலர் (45). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மலர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!