News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News October 14, 2025

கரூர்: இலவசமாக கடைகள் நடத்திக் கொள்ளலாம்

image

கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவகர் பஜார் பகுதியைத் தவிர பிற பகுதிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு குறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் சுங்க கட்டணம் இல்லாமல் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க மாமன்ற அவசரக்கூட்ட தீர்மானம் 2743 தீர்மானிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆட்சியர் தகவல்

image

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஹபீப் ஷாதி மஹாலிலும், கூடலூர் எம்ஜிஆர் நகர் வீரக்குமார் மண்டபத்திலும், தான்தோன்றி மலை நாயுடு மஹால் மண்டபத்திலும், வெள்ளியணை குமாரமங்கலம் ஊராட்சியில் சமுதாய மண்டபத்திலும், குளித்தலை ராஜேந்திரம் எஸ்.எம். எஸ் மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற இருக்கின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 13, 2025

கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

image

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <>www.tnpds.gov.in <<>>இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

error: Content is protected !!