News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 16, 2025
புளியங்குடியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்
News November 16, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.11.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம். காவல்துறை கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தென்காசி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இணைய அழைப்பு

தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த விண்ணப்பம் அளிக்கலாம். மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியிலும், 7010591852. 9788293060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


