News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News September 15, 2025
விருதுநகர்: கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பாலகுமார் என்பவர் தன்னுடைய நிலம் மற்றும் மற்றொருவரின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து கடனை வாங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். விவசாயம் சரிவர இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டள்ளது. இதனால் கடனை கட்ட முடியாததால் மன உளைச்சலில் இருந்த பாலகுமார் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 15, 2025
விருதுநகரில் ஆறு ஆண்டுகளாக அவலம்

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
News September 15, 2025
சிவகாசி அருகே சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் விளாம்பட்டி, மாரனேரி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் குறுகலான நிலையில் சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.