News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News November 6, 2025
குமரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

குமரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 6, 2025
குமரி: ஆசை வார்த்தைகள் கூறி ரூ.50 லட்சம் மோசடி

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜான். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நாகர்கோவிலில் தங்கி இருந்த போது 3 பேர் தொடர்பு கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்த நிலையில் வடசேரி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மோகனன், சுந்தர்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News November 6, 2025
குமரி: தீயில் கருகிய சிறுவன் உயிரிழப்பு

மேலஉடையப்பன் குடியிருப்பை சேர்ந்த பவிஷ்ணு(13) தீபாவளி அன்று உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் உறவினர் சந்திராதேவி(60) வீட்டிற்கு பட்டாசு வெடிக்க சென்ற போது விளக்கில் இருந்த மன்எண்ணெய் கொட்டி தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய நிலையில் சந்திராதேவி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.


