News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News October 26, 2025
திருச்சி அருகே டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் நேற்று (அக்.24) அவரது 50 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை சிந்தாமணி அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவரது டூவீலரை 14 வயதுடைய சிறுவன் திருடி சென்றதை கண்டறிந்தார். மேலும், இதேபோல, விஜயலட்சுமி என்பவரின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரையும் 14 வயதுடைய சிறுவன் திருடியதை கண்டறிந்தார். இதுகுறித்த புகாரில் கோட்டை போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.
News October 26, 2025
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி சிறுமியை கற்பழித்த வழக்கில் பாண்டியன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News October 25, 2025
திருச்சி: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!


