News April 25, 2025
கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு

தமிழக அரசு சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் மே.1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டங்களில் கடந்த ஆண்டின் வரவு, செலவு கணக்குகளை மக்கள் முன் பார்வைக்காக வைக்கவும், தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
கோவை மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️கோவை கலெக்டர்- 0422-2301114. ▶️மாநகராட்சி ஆணையர்- 0422-2390261. ▶️காவல் ஆணையர்- 0422-2300250. ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600. ▶️துணை ஆணையர்- 9445074575. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0422-2301119. கோவை மக்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 26, 2025
ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.