News April 29, 2025
கிராம சபைக் கூட்டம் குறித்து அறிவித்த ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கிருஷ்ணகிரி: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!
News December 7, 2025
இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
கிருஷ்ணகிரி: கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், ஹரீஷ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவிடம் இருந்து ரூ.80 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், மஞ்சுளாவின் மற்றொரு ஆண் நண்பர் மோனிஷ் உடன் பழகக்கூடாது எனத் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த மஞ்சுளா கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுளா, மோனிஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


