News April 29, 2025
கிராம சபைக் கூட்டம் குறித்து அறிவித்த ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
கிருஷ்ணகிரி: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <
News December 22, 2025
கிருஷ்ணகிரி: லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

ஓசூர்-பெங்களூரு சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. ஜங்ஷன் பகுதியில், லாரி மோதிய விபத்தில் ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.மேலும், லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் எல்நேஷ் மற்றும் சிவராம் ஆகிய 2பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!

கிருஷ்ணகிரி அம்மன் நகரில், தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவி விஜயலட்சுமியிடம் 51, முகமூடி அணிந்த மர்ம நபர் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். விஜயலட்சுமி கூச்சலிடுவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


