News October 23, 2024

கியாஸ் நுகர்வோர் கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ் ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக்.22,29, நவ. 5, 12,19, 26, டிச. மாதத்தில் 3, 10 மற்றும் 17-ம் தேதிகளில் மதியம் 2 முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

News October 16, 2025

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூரில் தீபாவளியை ஒட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கேயம், கரூர், கோவை, பொள்ளாச்சி, சோமனூர், ஈரோடு, பவானி செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும்.

News October 16, 2025

JUSTIN: திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூரின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே, பழைய அரசு மருத்துவமனை வளாகம், தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

error: Content is protected !!