News April 18, 2025

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

image

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News

News November 21, 2025

விழுப்புரம்: அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பு!

image

விழுப்புரம் வட்டம், பரசு ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா, சேர்ந்தனூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர், புதன்கிழமை சேர்ந்தனூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த, சிவமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 21, 2025

விழுப்புரம்: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை!

image

விழுப்புரம்: ஓமிப்பேரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், இவரது மனைவி ராகசுதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாலமுருகன், பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் நேற்று (நவ.20) வழக்குப் பதிந்தனர்.

News November 21, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!