News April 18, 2025

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

image

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News

News November 20, 2025

விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 20, 2025

விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 20, 2025

விழுப்புரம்: ரூ.1,19,000-க்கு மின்சாரம் திருடிய நபர்!

image

விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சித்தணி கிராமத்தில் தணிக்கை செய்த போது சேகர், என்பவர் தனது வீட்டிற்கு 5150 யூனிட் மின்சாரம் திருடியது தெரியவந்தது. திருடிய மின்சாரத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரம் என தெரியவந்தது. இதை அடுத்து உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததன் பேரில் சேகர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!