News April 11, 2025
கிணற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39), குழந்தையின்மை காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்ந்த யோசனையில் பொதுக் கிணற்றின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
தி.மலை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<
News November 8, 2025
தி.மலை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

திருவண்ணாமலை மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


