News October 23, 2024
காவல் நிலையத்தில் பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு பறந்த உத்தரவு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை 3 ஆண்டுகள் தாமதமாக வழங்கியதால், மனுதாரரான பல்லாவரத்தைச் சேர்ந்த டி. தங்கபாய் என்பவருக்கு ₹10,000 இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை இன்று முதல் ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
செங்கல்பட்டு: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<


