News September 28, 2024
காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருச்சி மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட கண்ட்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர் எஸ்எஸ்ஐ செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில், எஸ்எஸ்ஐ செந்தில்குமார், காவல் ஆய்வாளரின் கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் உண்மை தன்மை இருந்ததால் எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பணி இடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது எஸ்ஐஆர் படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்கள் அல்லது வாக்காளர்கள் உறவினர்களின் 2002/2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்றால், படிவத்தில் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.4-ம் தேதி நெல்லை சந்திப்பிலிருந்து, திருவண்ணாமலைக்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது நெல்லையிலிருந்து இரவு (டிச-3) 9:30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. பின்னர் மீண்டும் திருச்சியில் இருந்து 03:45-க்கு புறப்பட்டு, டிச.4-ம் தேதி காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
திருச்சி: வெளிநாட்டு மாணவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் விசா காலம் முடிவடைந்தும், சட்டவிரோதமாக தனியார் விடுதியில் தங்கியிருந்த, ருவாண்டா நாட்டை சேர்ந்த மாணவர் சேமா மன்சி பப்ரீஷ் (35) என்பவரை, வெளிநாட்டினர் பிராந்திய பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். அங்கு உரிய விசாரணைக்கு பின் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் அவர் ருவாண்டா நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


