News September 28, 2024

காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

image

திருச்சி மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட கண்ட்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர் எஸ்எஸ்ஐ செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில், எஸ்எஸ்ஐ செந்தில்குமார், காவல் ஆய்வாளரின் கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் உண்மை தன்மை இருந்ததால் எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பணி இடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 14, 2025

திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 14, 2025

திருச்சி: புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில், “புகையிலை இல்லா இளைய சமுதாயம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புகையிலையின் தீமைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரம் இருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

திருச்சி போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

image

திருச்சி இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: திருச்சி
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!