News September 15, 2024
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறையின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு, நேற்றைய வலைதளப்பக்கத்தில் இந்த விழிப்புணர்வு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
61 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 61 மனுக்கள் வர பெற்றன. இதனை ஆய்வு செய்த எஸ்பி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 26, 2025
தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.
News November 26, 2025
தூத்துக்குடியில் கல்வி கடன் வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களை ஒருங்கிணைத்து கல்வி கடன் வழங்கும் முகாம் நடத்துகிறது. வரும் 28.11.2025 (வெள்ளி) அன்று காலை 10.00 மணிக்கு சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE


