News August 4, 2024

காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

image

மயிலாடுதுறை எஸ்.பி மீனா அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்பால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற காவலர்களை ஒருங்கிணைத்து 10 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் மீரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

மயிலாடுதுறை: மழையா? இதை மறக்காதீங்க!

image

மயிலாடுதுறை மக்களே தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE

News November 17, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் வெளியாகியுள்ளது. இதில் நேற்று காலை எட்டு முப்பது மணி முதல் இன்று காலை ஆறு முப்பது மணி வரை மயிலாடுதுறை 55.80 மி.மீ, மணல்மேடு 20.00 மி.மீ, சீர்காழி 64.80 மி.மீ, கொள்ளிடம் 65.20 மி.மீ, தரங்கம்பாடி 57.60 மி.மீ , செம்பனார்கோவில் 93 .40 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!