News August 4, 2024

காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

image

மயிலாடுதுறை எஸ்.பி மீனா அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்பால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற காவலர்களை ஒருங்கிணைத்து 10 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க.<<>>
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி துவக்கம்

image

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி துவங்கியது. இதனை முன்னிட்டு மயூரநாதர் சுவாமி, ஐயாரப்பர், காசி விஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதாண்யேஸ்வரர் காவிரி கரைகளில் எழுந்தருளினர். இரு கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டு புனித நீராடினர்.

News October 19, 2025

மயிலாடுதுறையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு!

image

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று மேற்கண்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!