News August 7, 2024

கால அவகாசம் நீட்டிப்பு: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 1.8.2024 முதல் 31.1.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

கொடைக்கானல் அருகே பஸ் மோதி இளைஞர் பலி

image

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்ற போது, வத்தலக்குண்டுவிலிருந்து வந்த தனியார் பஸ்ஸை முந்த முயற்சித்த போது பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 14, 2025

திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

News December 14, 2025

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே,தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும் மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!