News April 14, 2024

கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் – அதிமுகவுக்கு ஆதரவு

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் சத்தியம் C.சரவணன் சாயல்குடி தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

இலங்கை சிறையிலிருந்து தொண்டி மீனவர்கள் விடுதலை

image

தொண்டி அருகே நவ.,3 ல் நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. படகும் விடுவிக்கப்பட்டது.

News December 13, 2025

ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

image

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 13, 2025

பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

image

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!