News April 12, 2025
கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் கடந்த, 10ஆம் தேதி இரவு தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: தொடரும் மாடுகளின் உயிரிழப்பு!

மூங்கில்துறைப்பட்டு;பாக்கம் ஏரிப் பகுதியில் மான்களை வேட்டையாட சமூக விரோதிகள் அமைக்கும் சுருக்குக் கம்பிப் பொறிகளில், அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சிக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. புதூரைச் சேர்ந்த ஒருவரின் மாடு அண்மையில் பொறியில் சிக்கி மீட்கப்பட்டது. இதை செய்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 1, 2025
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் பணி நடைபெற்றது. (SIR) தொடர்பான கணக்கீட்டுப்
படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.01) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகங்களுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் டிச.11ம் தேதி நிறைவு பெற உள்ளது.. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி
சட்டசபை தொகுதிகள் உளுந்தூர்பேட்டை – 04149- 222255, ரிஷிவந்தியம் – 04151- 235400, சங்கராபுரம் – 04151- 235329, கள்ளக்குறிச்சி (தனி)-04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


