News April 7, 2025

காரை: கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம்

image

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில், கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.

Similar News

News December 20, 2025

புதுவை: காசு வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது

image

உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி, வாணரப்பேட்டை சேர்ந்த அருள், பிரகாஷ், சத்தியமூர்த்தி, அற்புதராஜ், பாவாணர் நகர் தமிழ்மணி, ஆட்டுப்பட்டி முருகன், வம்பாகீரப்பாளையம் தர்மேந்திரன் சுரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 20, 2025

புதுவை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

சமிபத்தில் SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுச்சேரியில் இருந்து 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில்<<>> சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது

image

முதலியார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி மற்றும் கொம்பாக்கம் கனகவேல் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!