News April 7, 2025
காரை: கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம்

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில், கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
Similar News
News December 21, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் வார சந்தை வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி, நாளை (21.12.2025) ஞாயிற்றுகிழமை அன்று வார சந்தை திருநள்ளார் ரோட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நடைபெறும் என்று காரைக்கால் நகராட்சியின் ஆணையர் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
News December 20, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவைத் தலைவர் வரவேற்பு

புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று (20.12.2025) வந்த மத்திய தொழிலாளர் நலம், வேலை வாய்ப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி மற்றும் புதுச்சேரி பாஜக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் மான்சுக் எல். மண்டாவியாவை, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சால்வை அணிவித்து, மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.
News December 20, 2025
அரசு காப்பீட்டு கழகத்தில் சமூக பாதுகாப்பு குறியீடு

புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக, மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு சமூக பாதுகாப்பு குறியீடு, கடந்த மாதம் 21ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் தொடர்பாக, முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சமூக பாதுகாப்பு குறியீட்டில் அனைத்து தகுதியான ஊழியர்களையும் காப்பீட்டில் பதிவு செய்து, உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.


