News December 6, 2024
காரைக்கால் தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 06.12.2024 முதல் 17.12.2024 வரை காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணத்தை விண்ணப்பத்தை செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் மாவட்ட அறியலாம்
Similar News
News November 19, 2025
புதுவை: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி!

புதுவை அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி. கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடக்கவுள்ளது. அதனையொட்டி புதுவையில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இனிமேல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
News November 19, 2025
புதுவை: 135 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பு!

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள்
கடந்த 13.08.2025 முதல் 12.09.2025 அன்று மாலை 03.00 மணி வரை இணைய வழியில் பெறப்பட்டது. இதில் மொத்தமாக 10,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகள் ஆய்வு செய்யப்பட்டு 9,928 விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. 135 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
News November 18, 2025
புதுவை: மலர்க்கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில், புதுச்சேரியில் வரும் 2026 ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் 36வது காய்கறி, கனி மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவது சம்பந்தமாக வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


