News August 24, 2024
காரைக்கால் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான (2024 – 2025) முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் சேர்க்கை வருகிற 28.08.24 காலை 10.00 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற உள்ளன. மேலும் இதற்கான முழுவிவரம் கல்லூரி இணையதளத்தில் www.kmkpgskkl.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
புதுவையில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு

பாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாகூர் பகுதியில் ஒருவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்துள்ளார். மேலும் அவர் போலீசாரை கண்டதும் மாட்டுவண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் பேரிச்சம்பாக்கத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.


