News August 24, 2024

காரைக்கால் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான (2024 – 2025) முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் சேர்க்கை வருகிற 28.08.24 காலை 10.00 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற உள்ளன. மேலும் இதற்கான முழுவிவரம் கல்லூரி இணையதளத்தில் www.kmkpgskkl.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

image

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

image

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!