News August 26, 2024
காரைக்கால் அருகே கஞ்சா விற்றவர் கைது

காரைக்கால் அடுத்த திருபட்டினம் காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குப்புற வழிச்சாலையில் முகமது மீரான் சாஹிப் என்பவரை போலீசார் சோதனை செய்த போது 10 கிராம் வீதம் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாகக் கட்டி 300 கிராம் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் மீட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
புதுவை: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுச்சேரி: வேரோடு சாய்ந்த 20 மரங்கள்

புதுச்சேரி, ஏனாமில் மோன்தா புயலால் நேற்று (அக்.28) காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 20 மரங்கள் வேரோடு சாய்தன. இதனால் ஏனாம் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் ஏனாமில் நேற்று காலை வரை மோன்தா புயலால் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News October 29, 2025
புதுவை: வாக்காளர் திருத்தப்பணி அறிவிப்பு

“புதுவையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி வரும் 4-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.” என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.


