News March 28, 2024
காரைக்காலில் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி வாகனங்கள், பேருந்துகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், மதுபானம், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Similar News
News November 18, 2025
புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
News November 18, 2025
புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
News November 17, 2025
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுறை அறிவிப்பு

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று புதுவை மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (நவ.18) காரைக்காலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


