News March 28, 2024

காரைக்காலில் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி வாகனங்கள், பேருந்துகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், மதுபானம், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Similar News

News December 5, 2025

கடலோர காவல்படை கமாண்டர் புதுச்சேரி வருகை

image

புதுச்சேரி வந்திருந்த இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் தந்த்விந்தர் சிங் சைனி நேற்று உப்பளம் துறைமுகத்தில் உள்ள கடலோர காவல் படை உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலர் சரத் சவசாள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டிருதி. தசிலா, இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் கமாண்டர் சந்தோஸாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News December 5, 2025

புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

image

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!