News April 16, 2025
காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 7, 2025
புதுவை: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


