News April 16, 2025

காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

image

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 12, 2025

புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.

News November 12, 2025

புதுச்சேரி: கார் மோதி தொழிலாளி படுகாயம்

image

காரைக்கால் அகலங்கன்னு கிராமம் சிவக்குமார், இவர் விவசாய தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டிபன் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் விழிதியூர் சென்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

புதுச்சேரி: நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2024-25ம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவி மற்றும் பண பயன் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் அந்தந்த பிராந்திய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!