News April 16, 2025
காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 9, 2025
காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
News December 9, 2025
புதுவை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.


