News April 16, 2025

காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

image

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 16, 2025

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்ட செய்தி குறிப்பில், வானிலை ஆய்வுமைய தகவலின்படி, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஆகையால் அதிகன மழை பெய்யக்கூடும் நிலையில், காற்று மணிக்கு 55கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று, புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 ஆகிய எண்களை தொடர்புகொள்ள அறிவித்தார்.

News November 16, 2025

காரைக்காலுக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!