News April 16, 2025

காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

image

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Similar News

News September 16, 2025

புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

image

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

News September 15, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!