News March 29, 2024
காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 16, 2025
திருவள்ளூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
திருவள்ளூர்: குறைந்த விலையில் வாகனம் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 11 மோட்டார் சைக்கிள், 8 நான்கு சக்கர வாகனங்கள் வருகிற 21-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது. காலை 8 மணி முதல் 10 மணி வரை நாடாகும் இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த விலையில் வாகனம் வாங்க செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
திருவள்ளூர்: தண்ணீர் டிராக்டர் மோதி குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சார்ந்த சந்தியாவின் 2 வயது மகள் விஜிதா நேற்று (நவ.15) எதிர்பாராத விதமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் டிராக்டரில் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக குழந்தை நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து டிராக்டர் டிரைவர் தேவன் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


