News April 18, 2025
காரமும் மணமுமிக்க விளாத்திகுளம் முண்டு வத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
Similar News
News November 19, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் இரண்டு பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் போலீசாரல் கைது செய்யப்பட்டார். இதைப்போல் ஆறுமுகநேரியில் ஒரு கொலை வழக்கில் பெருமாள் புரத்தைச் சேர்ந்த இசக்கி முத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரை செய்ததை அடுத்து இரண்டு பேரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
News November 19, 2025
BREAKING: தூத்துக்குடி கார் விபத்தில் 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் ராகுல், ஜெபஸ்டின், முகிலன் நேற்று இரவு இவர்கள் கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில், மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர். இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (நவ. 19) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE


