News April 19, 2025

காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

image

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.

Similar News

News November 15, 2025

தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு: வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ற்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

தூத்துக்குடியில் 57 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காவல்நிலைய வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்ததுடன், சைபர் மோசடி வழக்குகளில் பணத்தை மீட்டதில் சிறந்து செயல்பட்ட 57 போலீசார் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்கள் இன்று (நவ.14) நற்பணி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

News November 14, 2025

VOC துறைமுகத்தில் அக்டோபர் மாத ஏற்றுமதியில் 8.52% வளர்ச்சி!

image

தூத்துக்குடி VOC துறைமுகம் 2025 அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. மொத்த 20,584 TEUs ஏற்றுமதி கன்டெய்னர்களில் 17,506 TEUs Direct Port Entry (DPE) முறையில் செயல்படுத்தப்பட்டதாக துறைமுகம் தெரிவித்துள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது 8.52% வளர்ச்சியை காட்டுகிறது. கடல் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் பணிகளில் துறைமுகத்தின் செயல்திறன் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.

error: Content is protected !!