News November 24, 2024

காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

சிவகங்கை: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

image

கீழக்குளம் கிராமம் அருகே உள்ள அடர்த்தியான மற்றும் முள்ளான காட்டு பகுதியில், ஒரு history sheeter பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல history sheeters கூடியிருந்தார்கள். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 40 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் குழு முற்றுகையிட்டு இருவரை கைது செய்ததோடு 2 வாள்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் சில சந்தேகப்பொருட்கள் பறிமுதல் செய்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

News November 24, 2025

சிவகங்கைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

சிவகங்கை: 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்

image

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். தற்போது மாநகாராட்சியில் புகார் அளித்துள்ளனர்
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

error: Content is protected !!