News November 24, 2024
காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
தமிழ்நாட்டின் திட்டங்களை இந்தியா வியந்து பார்க்கிறது

சிங்கம்புணரியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: திராவிட மாடல் அரசால் ஒவ்வொரு இல்லங்களுக்கும் நமது திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. நமது முதலமைச்சர் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களையும் இந்தியாவை வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 830 கோடி மகளீர் விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
News November 15, 2025
சிவகங்கை: அரசு பள்ளியில் வேலை ரெடி., உடனே APPLY

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க இங்கு <
News November 15, 2025
சிவகங்கையில் 17 வயது சிறுவன் மீது வழக்கு

புதுவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 4 அடி நீளமுள்ள வாளை கையில் பிடித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், சிறுவனிடமிருந்து அந்த வாள் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


