News March 27, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

image

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 18, 2025

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

image

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2025

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

image

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2025

தேனி மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

தேனி மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!