News May 7, 2025

காணாமல் போனவர் அழுகிய நிலையில் மீட்பு

image

ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் பிரபு குமார் (42). இவர் இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில், இவர் அழுகிய நிலையில் நெல்லியேந்தல்பட்டி கண்மாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. குளிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

மதுரை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

மதுரை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!