News December 6, 2024

காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 715 பயனாளிகளுக்கு 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (செப்ட. 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News September 15, 2025

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

வேலூர் விஐடி: கல்வி கடன் முகாம் ஒத்திவைப்பு

image

வேலூர் வி.ஐ.டி. வளாகத்தில், நாளை (செப்.16) நடைபெற இருந்த கல்வி கடன் முகாம், செப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த முகாமில், கல்விக்கடன் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!