News August 24, 2024

காட்பாடியில் கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது

image

காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி காமேஷ் கைவிலங்குடன் தப்பி ஓடினார். இதையடுத்து தப்பி ஓடிய காமேஷை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 24) கசம் அருகே மலையில் பதுங்கி இருந்த தப்பி ஓடிய விசாரணை கைதி காமேஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 1, 2025

வேலூரில் இன்று கிராம சபை கூட்டம்: கலெக்டர்

image

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் நாளை நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

News October 31, 2025

வேலூருக்கு வருகை தந்த துணை முதல்வர்

image

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (அக்.31) வேலூர் கோட்டை மைதானத்தில் ஆய்வு செய்தார். ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News October 31, 2025

வேலூரின் அழியா சின்னம் இதுதான்!

image

வேலூரின் அழியாத சின்னமான வேலூர் கோட்டை, 16-ம் நூற்றாண்டில் குச்சி பொம்முன நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற சிறப்பை பெற்ற இக்கோட்டையின் 3 பக்கமும் மட்டுமே தண்ணீர் உள்ளது. இக்கோட்டை, 133 ஏக்கர் பரப்பளவும், 191 அடி அகலமும் கொண்ட அகழிக்கோட்டையாக அமைந்துள்ளது. மேலும், இக்கோட்டைக்குள் ஒரு கோயில், தேவாலயம், பள்ளிவாசல் அமைந்துள்ளது.

error: Content is protected !!