News August 2, 2024

காட்பாடியில் ஓடும் ரயிலில் இறங்கிய கல்லூரி மாணவன் பலி

image

கேரளா மாநிலம் எர்ணாகுளம் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சகோதரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவர் தூக்கத்தில் இருந்த போது ரயில் காட்பாடி கடந்தது. இதனால் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்து பலியானார்.

Similar News

News July 7, 2025

ஆம்பூரில் 4 கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் வேலூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் 4 கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று (ஜூலை 06) ஆசிப்பை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்து அவரது சகோதரி வீட்டிலிருந்து 4 கைத்துப்பாகிகளை பறிமுதல் செய்தனர்.

News July 6, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962559>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!