News March 24, 2025
காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.
News December 20, 2025
விருதுநகர்: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிச்சைமணி(47). இவர் விருதுநகர் மாவட்டம் ஊத்தாங்கல் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த போது, கடந்த மே மாதம் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி பிச்சைமணிக்கு 5 ஆண்டுகள் சிறை, அபராதம் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 20, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விசைத்தறிகள் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிவுகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் http://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


