News March 24, 2025
காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
சிவகாசி: முத்தம் கொடுத்து மிரட்டியவர் கைது

சிவகாசி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமனமாகி மனைவி உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியை ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதை படம் எடுத்து மிரட்டி வருவதாக மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
News December 14, 2025
விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 14, 2025
விருதுநகர்: ரயில் மோதி வாலிபர் பலி

விருதுநகர்-துலுக்கப்பட்டி ரயில்நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (36) என் தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார் என விசாரணையில் கூறப்படுகிறது.


