News March 24, 2025
காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
விருதுநகர் மக்களே., இதை மிஸ் பண்ணிடாதீங்க!

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சூலக்கரை மேடு, அரசு ITI அருகில்) நாளை (19.9.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே இதனை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

பாண்டிச்சேரியில் இருந்து காரில் விருதுநகர் நோக்கி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த நபர் அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வாகன காப்பகத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.