News April 25, 2025
காஞ்சி: நீதிபதி என கூறி பல லட்சங்கள் மோசடி

காஞ்சி மாநகராட்சியை சேர்ந்தவர் அருண் சூர்யா(28), வக்கீல். இவர் மோகன் என்பவரிடம் தான் சென்னை கோர்ட்டில் நீதிபதியாக உள்ளதாகவும் தன்னால் அவரது மகனுக்கு மெட்ரோவில் வேலை வாங்கி தரமுடியும் எனவும் கூறி ரூ.9 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் அருண் சூர்யாவை கைது செய்து,மேலும் பலரிடம் ஏமாற்றிய பல லட்சங்களை மீட்டுள்ளனர். *அரசு வேலை நாடும் நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்
Similar News
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க
News April 25, 2025
காஞ்சிபுரம்: அரசு அலுவலக எண்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் தொடர்பு எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர்: +91-044-27238433
▶️மாவட்ட ஆட்சியரகம்: +91-044-27238477, 27238478
▶️மாவட்ட வருவாய் அலுவலர்: 044-27237945
▶️வலைதள தகவல் மேலாளர்: +91-044-27237424
▶️நிகரி எண்: +91-044-27237789
▶️வருவாய் கோட்டாட்சியர்: +91 9445000413
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 25, 2025
செல்வம் செழிக்க வைக்கும் பூமாத்தம்மன்

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்