News April 25, 2025
காஞ்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில் காஞ்சிபுரம் முக்கியமானது. ஆனால், இங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். ஆம், 2023-ல் வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, 2024-ல் ஆய்வாளர் ஷ்யாமளா, கடந்த பிப்ரவரி மாதம் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் என கடந்த ஒன்றறை ஆண்டுகளில் 4 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர். *இப்படி தலை விரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க இந்தியன் தாத்தா வரணுமோ?*
Similar News
News July 9, 2025
காஞ்சிபுரத்தில் 109 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், காஞ்சிபுரத்தில் மட்டும் 109 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27237124)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002055>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
News July 9, 2025
காஞ்சிபுரத்தில் 109 பாரன்ஹீட் அளவில் வெப்பம்

காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது பாரன்ஹீட் அளவில் 109 டிகிரியாகும். இதனால், காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் , கட்டுமான தொழிலாளர்கள், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர், உணவு டெலிவரி செய்வோர் என வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்