News February 14, 2025
காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவராக கே.ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளராக ஜ.பாஸ்கர், மாவட்ட பொருளாளராக அ.விஜய் பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மோ.கோபி ஆகியோரை நியமனம் செய்து பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News February 21, 2025
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
News February 21, 2025
பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில், கிடங்கு அமைத்து, அதில் மெத்தை தயாரிக்கும் மூலப்பொருட்களான பஞ்சு உள்ளிட்ட பொருட்களை, நுாருல்லா,50. என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிடங்கில், நேற்று (பிப்.20) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
News February 20, 2025
அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <