News August 10, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6194 மாணவர்களுக்கு உதவிதொகை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஏ.டி.எம் கார்டை வழங்கினார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,194 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக இதில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் 2,632 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
காஞ்சிபுரத்தில் ரூ.9.31 லட்சம் அபராதம்

காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பர் மாத வாகன தணிக்கையில், விதிமீறிய 121 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.9,31,690 அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
News December 4, 2025
காஞ்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
காஞ்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


