News August 3, 2024
காஞ்சிபுரம் மாணவனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் கிஷோருக்கு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில செல்வதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல்வர், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 7, 2025
காஞ்சியில் தோண்ட தோண்ட கிடைக்கும் அதிசயம்!

காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோரம், அரசு அருங்காட்சியக காப்பாட் சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் 16ம் நுாற்றாண்டு, விஜய நகரப் பேரரசு கால சதிகல் சிற்பத்தை நேற்று கண்டெடுத்தனர். இந்த சதிகல் சிற்பம் 25 செ.மீ., அகலம், 38 செ.மீ., உயரம் கொண்டது. தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன.
News November 7, 2025
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி.

சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவர், வீட்டில் 50-க்கும் மேற்பட்டவா்கள் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணப்பன் நேற்று காலை வழக்கம்போல் வயல்வெளி பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து இரண்டு எருது மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
News November 7, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


