News April 9, 2025

காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

image

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்

Similar News

News September 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான அறிவிப்பானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 22.09.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

News September 17, 2025

காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வது கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அறிவிக்கபட்டுள்ளது. நாளை (18.09.2025) மாங்காடு நகராட்சி, ரகுமான் மண்டபம், பட்டூர், மாங்காடு, குன்றத்தூர் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடம், குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து, இரண்டாம் கட்டளை ஊராட்சி, ரெட்டியார் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள திறந்தவெளி மைதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!