News April 9, 2025

காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

image

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்

Similar News

News January 2, 2026

காஞ்சிபுரம்: எந்திரத்தில் தலை சிக்கி கொடூர பலி!

image

உத்திரமேரூர் ஒன்றியம் ரெட்ட மங்கலம் கிஉராமத்தில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாய்னர் அபின்(19) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு எந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஜாய்னரின் தலை அதில் சிக்கி, கொடூரமாக பலியானார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 2, 2026

காஞ்சிபுரம்: விபத்தில் துடிதுடித்து பலி!

image

சந்தவேலூர் கிராமம், குண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாமலாவலா ஆப்பிள்(48). இவரது மனைவி சங்கீதா, மகன் ஆதியுடன் பைக்கில் வாலாஜாபாத் சென்றுவிட்டு மீண்டும் சுங்குவார்சத்திரம் நோக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் ஜாமலாவாலா ஆப்பிள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும், மனைவியும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!