News April 9, 2025

காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

image

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்

Similar News

News December 23, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர் புற நலவாழ்வு மையத்திற்கு மருத்துவ அலுவலர் -1 பணியிடத்தினை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News December 23, 2025

காஞ்சிபுரம்: வேஷ்டி கட்டாதவர்களுக்கு அபராதம்!

image

உத்திரமேரூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி வேஷ்டி அணியாமல் வந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ரூ.200 அபராதம் விதித்தார். கூட்டத்தில் வந்த பலரும் கரை இல்லாத வேஷ்டி அணிந்து வந்ததால், இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

News December 23, 2025

காஞ்சிபுரம்: தம்பியுடன் தகாத உறவு! ; குழந்தை பலி

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2ஆவது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!