News March 19, 2024
காஞ்சிபுரம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News April 10, 2025
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் பற்றிய விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக டி.எஸ் ராமச்சந்திரன் இருந்தார். அவரை சேர்த்து தற்போது வரை 62 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 6 பெண்கள், 56 ஆண்கள். 10 வது கலெக்டர் எஸ்.பி.ஸ்ரீநிவாசன், 20 வது நடராஜன், 30வது ராமச்சந்திரன், 40வது ராம்மோகன்ராவ், 50வது சுதர்சன், தற்போது, 62 வதாக கலைச்செல்வி மோகன் உள்ளார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *புது தகவல்னா நண்பர்களுக்கும் பகிருங்கள்
News April 10, 2025
காஞ்சி மாவட்டத்தில் 74 பணியிடங்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 74 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <
News April 10, 2025
மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க