News March 25, 2024
காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 பேர் வேட்புமனுக்களை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.
Similar News
News April 19, 2025
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.
News April 18, 2025
காஞ்சிபுரம்: பொன் சேர வேண்டுமா…? இங்கு போங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்
News April 18, 2025
காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <